Monday, May 25, 2009

தலைவர் / தலைவரை போலுள்ளவர் சுட்டுக்கொல்லப்படவில்லை-திருத்தப்பட்டது

எனது நேற்றைய பதிவுக்கும் , பல பதிவர்களின் கேள்விகள் அலசல்கள் என்பவற்றுக்குமான ஒரு பதிலாக இத்தனை எழுதலாமென்று நினைக்கிறேன்.

முதலில் எல்லோரும் அந்த காணொளியை சரியாக பார்தீர்களா ?, அதிலேசிங்கள இராணுவம் கதைப்பதற்கான அர்த்தம் தெரியுமா ? அதைவைத்துஏதாவது சிந்த்தித்து பார்த்தீர்களா ?

அவர்கள் கதைப்பதெல்லாம் நாடகமல்ல உண்மையாக அவர்களது சந்தோசத்தின் வெளிப்பாடு, தனது வீரத்தை ஒருவன் சொல்ல மற்றவனிடமிருந்து வெல் டன்.......வெல் டன் என்ற பாராட்டு கிடைக்கிறது.


அதிலே ஒருவன் சொல்கிறான், " இவன் ஏசினான் சரணடயிரவங்களுக்கு, ஆம்பிளண்டா ஏண்டா சரணடயிறீங்க எண்டு .

அப்போது மற்றவன் கேக்கிறான் யாரு தலையில் அடித்தது ?

தலையில் வெடி வைத்தது யாரு என்று கேக்கவில்லை. அடித்தது யாரு ? என்றுதான் கேக்கிறான்.

ஆக அங்கெ பிணமாக கிடப்பவர் பேசி இருக்கிறார். இதற்க்குஇரண்டு வழிகள் இருக்கின்றன.

ஒன்று உயிருடன் பிடிபட்டிருக்கும்போது சரணடைபவர்களை பார்த்து கேட்டிருக்கலாம்.


அது உண்மையிலேயே தலைவராக இருந்தால் பிடிபட வாய்ப்புகள் குறைவு .
ஒருவேளை (அப்படி நடந்திருக்க கூடாது என்பதுதான் எனது பிரார்த்தனைகள் )
எதோ ஒரு மூன்றாம் தரப்பை நம்பி சரணடைந்து இருக்கலாம், சரணடைவுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன என்பது எல்லோருக்கும்தெரியும் . அப்படி சரணடைந்திருக்கும் பொது அவரது கண்ணின் முன்னால் எதோ நடந்திருக்கிறது . (எனக்கு இந்த பயத்தைதமிழரங்கம்ஏற்படுத்திவிட்டது ) அவரிடமுள்ள ஆயுதங்கள் பறிக்கப்பட்டு நிராயுதபாணியாக வைக்கப்பட்டிருந்திருக்கலாம்.


சரணடையும்
போது அடையாள அட்டைகள் தேவைப்பட்டிருக்கலாம், மூன்றாம் தரப்பென்றால் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டி இருந்திருக்கும்.

சரணடைபவர்களுக்கு ஏசினார் என்றால் அவர் சரணடைந்திருக்க முடியாது, பிடிபட்டிருந்திருக்க வேணும். அல்லது தான் சரணடைந்தது தவறு என்பதை உணர்ந்து மற்றவர்களை தடுத்திருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் ஆமிக்கு கேட்கும்படிதான் கதைத்திருக்கிறார் எனவே பக்கத்தில் தான் நின்றிருக்கவேண்டும்.


பதினேழாம் திகதி இலங்கை இராணுவம் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவித்ததும், எல்லாம்தெரிந்த பத்மநாதன், தலைவர் சாகவில்லை என்று சொல்லியிருக்கிறார். ஏனென்றால் அவர்தானே மூன்றாம் தரப்பை கொண்டுவந்தது , ஆகவே ஒன்றும் நடக்காது என்று நம்பி அந்த பேட்டியை அளித்திருக்கலாம்.
ஆனால் அடுத்தநாள் அரசாங்கத்தின் திட்டப்படி எல்லாம் நடந்திருக்கும்.


இரண்டாவது , அந்த நபர் தலைவரைபோலவே உருவ ஒற்றுமை கொண்டஒருவராக இருக்கலாம், அவர் சரணடைந்து மேலே சொன்னபடி ஏதாவது பேசி அடிக்கப்பட்டிருக்கலாம். அல்லது சும்மா ராணுவத்துக்கு தெரியுமாறுவெளியில் நின்று ஏதாவது பேசி இருக்கலாம் ஒரு திசை திருப்பலாக.

இந்த காணொளி கொலை நடந்த உடனேயே எடுக்கப்பட்டது . இரத்தக்கறைகூட காயவில்லை. அதாவது பத்தொன்பதாம் திகதி காலையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் . பத்மநாதனின் கருத்துப்படி அவர்பதினேழாம் திகதி என்று கூறுகிறார், அதற்க்கு வாய்ப்பே இல்லை. இலங்கை இராணுவம் அன்றுதான் அம்புலன்ஸ் புருடா விட்டது, அப்படிஎன்றால் அவர்கள் இந்த காணொளியை அன்றே வெளியிட்டிருப்பார்கள்.

எது எப்படியோ , அது தலைவரோ, தலைவரைப்போல் ஒருவரோ ,அந்நபர் சுட்டுக்கொல்லப்படவில்லை
மிக அருகில் வைத்து அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.

அதன்பிறகு , நந்திக்கடல், சேறு , சண்டை , கருணா , தயா மாஸ்டர் என்ற நாடகங்கள் அரங்கேறியிருக்கும்.

அது தலைவராக இருந்தால் இறுதிப்போர் சமயத்தில் ஒரு மிகப்பெரிய சதி, துரோகம் , நம்பவைத்து கழுத்தறுத்தல், பேரம் பேசல் நடந்துள்ளது.

இது காலப்போக்கில் தெரிய வரலாம் இல்லை அப்படியே அழிந்து போகலாம்.

எமக்கு நன்கு அறிந்த தலைவர்கள் தளபதிகள் யாரும், வெளியில் வந்து உண்மை உரைக்காதவரை, பத்மநாதனயோ, அறிவழகனயோ எம்மால் நம்ப முடியாது. தெரிந்தோ தெரியாமலோ புலிகள் இருந்தால்தான் போராட்டம் நடத்தமுடியும் என்று பழக்கப்பட்டு விட்டோம் எனவே புலம்பெயர் மக்கள் தலைவர் இல்லையென்று நினைத்துக்கொண்டு தங்களையே தலைமையாக நினைத்துக்கொண்டு தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியதுதான், இன்னும் வீரியத்துடன்.

பத்மநாதனின் அறிவிப்பு உங்களை, உங்களின் போராட்டங்களை அடக்கி ஒரு சோர்வு நிலைக்கு தள்ளுவதற்கான ஒரு அழுத்தத்தினால் வந்திருக்கலாம். தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துங்கள் ஆனால் இப்போது நீங்கள் செய்யும் போராட்டத்தின் பல மடங்கு வீரியத்துடன் அது இருக்க வேண்டும் அதையே தொடர வேண்டும், அவர்கள் எது நினைத்தார்களோ அதற்க்கு எதிராய் இருக்கவேண்டும் உங்கள் நடவடிக்கைகள் . தலைவரே போய்ட்டார் இனியென்ன இருக்கு என்று நீங்கள் பலர் கேட்பது தெரியும் ஆனால் தலைவரே இதைதான் விரும்பினார் இந்த சண்டை தொடங்கிய நாளிலிருந்து வன்னியிலிருந்து வந்த பேட்டிகளில் உங்களுக்காக வந்த அழைப்பு என்ன ? உங்களால்தான் முடியும் என்பதுதானே ? அவர் உங்களைதான் , அடுத்த தலைமுறையைதான் நம்பியிருந்தார். நீங்கள் ஏற்றும் ஈகைசுடர் தலைவனை சந்தோசப்படுத்தாது, உங்களின் போராட்டத்தீ தான் அவரை சந்தோசப்படுத்தும்.

தலைவர் இருந்தால் உங்கள் முன் தோன்றுவார்.

நன்றி.












No comments:

Post a Comment